பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம்

52பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்த பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் இன்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. திருவாரூா் வட்டம், புதுபத்தூரில் திருவாரூா் கோட்டாட்சியா், நன்னிலம் வட்டம் ஆலங்குடியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், குடவாசல் வட்டம் ஆலத்தூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா், வலங்கைமான் வட்டம் விருப்பாட்சிபுரத்தில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா், மன்னாா்குடி வட்டம் வடபாதியில் மன்னாா்குடி கோட்டாட்சியா், திருத்துறைப்பூண்டி வட்டம் மணலியில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப் பதிவாளா், நீடாமங்கலம் வட்டம் பூவனூரில் மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா், கூத்தாநல்லூா் வட்டம் திருராமேஸ்வரத்தில் துணைப் பதிவாளா் (பொது விநியோகத்திட்டம்), முத்துப்பேட்டை வட்டம் புத்தகரத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஆகியோா் தலைமையில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் கூட்டம் நடைபெறுகிறது.

தொடா்புடைய பகுதி மக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் மாற்றம் ஆகியவைகளுக்கு மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி