திருவாரூரில் ஜூன் 22இல் நெல் திருவிழா - அழைப்பு

71பார்த்தது
திருவாரூரில் ஜூன் 22இல் நெல் திருவிழா - அழைப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா தனியார் திருமண அரங்கில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்பு பண்ணையின் சார்பில் தேசிய நெல் திருவிழா ஆண்டு தொடரும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 2024ஆம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழா ஜூன் 22ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற உள்ளது. திருத்துறைப்பூண்டியில் நடைபெற உள்ள இந்த நெல் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான வேளாண் கல்லூரி பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், இயற்கை வேளாண்மை விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பங்கேற்க உள்ளார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். எனவே இதில் அனைத்து பகுதி பொதுமக்களும், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளும் இத்திருவிழாவில் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி