அரசு கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

59பார்த்தது
அரசு கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
கல்லூரி கனவுகளுடன் காலெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரம் காலம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் வலுவான தாக்கங்களை நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனையாளர்கள் , ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள் அரசியல் ஆளுமைகள் , தொல்லியலாளர்கள் , விஞ்ஞானிகள் , கல்வி வழிகாட்டுநர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், தடைகளை தாண்டி வெற்றி பெற்ற மூன்றாம் பாலினத்தார், உளவியல் நிபுணர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் , கலையிலக்கியவாதிகள், பல்துறை கலைஞர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், முன்மாதிரிப் பெண்ணாளுமைகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் அழைத்து புதுமுக மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி மனந்திறந்த உரையாடலாக வினா விடை நிகழ்வாக ஒருங்கிணைப்பதின் மூலம் புதுமுக மாணவர்களின் அறிவும் உணர்வும் பக்குவபடுத்தப்பட்டு அவரவர் இலக்கை நோக்கி வெற்றி பயணம் தொடர உயர் கல்வி துறையின் புதிய முயற்சியாகும்.

தொடர்புடைய செய்தி