ரவுடி கால் முறிவு காவல்துறை நடவடிக்கை

65பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட - திருத்துறைப்பூண்டி, அபிஷேககட்டளை பகுதியை சேர்ந்த முத்தரசன் மகன் குருமாறன் (வயது-24) என்ற ரௌடி மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், ஆஜர் செய்த போது அங்கிருந்து தப்பி சென்றவர், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்

தலைமறைவாக இருந்த ரவுடி குருமாறன் திருத்துறைப்பூண்டி சிங்கலாந்தி ரயில்வே மேம்பாலத்தில் நிற்பதாக கிடைத்த தகவலின் படி திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் காவலர்களுடன் கைது செய்ய சென்ற போது போலிசார் வருவதை கண்டு தப்ப முயன்று ரயில்வே பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்படி, ரௌடி குருமாறன் மீது முன்னதாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அடிதடி, ஆயுதத்தை கொண்டு மிரட்டுதல், கஞ்சா விற்பனை தொடர்பாக 8 வழக்குகள் விசாரணையில் உள்ளது. மேலும், இவர் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் குற்றச்சரித்த பட்டியலில் குருமார்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி