நீடாமங்கலத்தில் பரண்மேல் ஆடு வளர்ப்பு பயிற்சி

75பார்த்தது
நீடாமங்கலத்தில் பரண்மேல் ஆடு வளர்ப்பு பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண்மேல் ஆடு வளா்ப்பு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி தலைமை வகித்தாா். மன்னாா்குடி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். முத்துப்பேட்டை கால்நடை மருத்துவா் மகேந்திரன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சபாபதி, கால்நடை மருத்துவா் பவித்ரா உள்ளிட்டோா் பங்கேற்று பல்வேறு ஆடு வளா்ப்பில் பல்வேறு தலைப்புகளில் பேசினா். இதில், 57 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனா். நீடாமங்கலம் தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி