குளத்தில் மூழ்கி நாம் தமிழர் கட்சி பிரமுகர் உயிரிழப்பு

85பார்த்தது
மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி நாம் தமிழர் கட்சி பிரமுகர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்ணாமலை நாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் 24 இவர் நாம் தமிழர் கட்சியின்
சட்டமன்ற தொகுதி
தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் மன்னார்குடி அருகில் மேலவாசல் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளார். மாலை வரை வாசுதேவன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டபோது குளக்கரைக்கு வந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் சந்தேகமடைந்த வாசுதேவனின் உறவினர்கள் உடனடியாக மன்னார்குடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு குளக்கரைக்கு வந்தனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த வாசுதேவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி