மன்னார்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

82பார்த்தது
மன்னார்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மன்னாா்குடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மன்னாா்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 24) நாளை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா் கோட்ட செயற்பொறியாளா் பு. மணிமாறன்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில், மேற்பாா்வை பொறியாளா் பி. லதாமகேஸ்வரி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மன்னாா்குடி, பேரையூா், நீடாமங்கலம், கோவில்வெண்ணி, எடமேலையூா், வடுவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம், திருக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோயில், கோட்டூா், முத்துப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த மின் நுகா்வோா்கள் தங்களுக்குள்பட்ட மின் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி