நகராட்சி வாயிலில் அமர்ந்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா

62பார்த்தது
ஒப்பந்த துப்புரவு பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து மன்னார்குடி நகராட்சி அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர துப்புரவு பணியாளராக ராஜேஸ்கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது பல்வேறு பணிகளையும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் செய்ய வேண்டுமென என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தது இது குறித்து மன்னார்குடி நகராட்சி ஆணையரிடம் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ராஜேஷ் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். நகராட்சி ஆணையரும் ராஜேஷ் கண்ணனை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்பணி செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை செய்துள்ளார். மேலும் ராஜேஷ் கண்ணன் துப்புரவு பணியாளர்களை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனை கண்டித்து இன்று காலை மன்னார்குடி நகராட்சி அலுவலக வயதில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி