குத்துச்சண்டை வீரருக்கு பாராட்டு விழா

572பார்த்தது
குத்துச்சண்டை வீரருக்கு பாராட்டு விழா
*தாய்லாந்தில் குத்து சண்டை போட்டியில். தங்கப் பதக்கம் வென்ற திருவொற்றியூர்
*வீரருக்குபாராட்டு விழா

திருவொற்றியூர்‌ தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் நடைபெற்ற மொய்த்தாய் குத்துச்சண்டை
கிக் பாக்சிங் போட்டியில் உலக அளவில் 42 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த திருவொற்றியூர் தியாகி சத்திய மூர்த்தி நகர் ஈ. அர்ஜுனன் ஏ. தீபா தம்பதியினரின் மகன் கோபி கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.

தங்கப்பதக்கம் வென்ற ஏ. கோபிக்கு பாராட்டு விழா
திருவொற்றியூர் சண்முகபுரத்தில் அமைந்துள்ள பிவி விக்டரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தியாகி சத்தியமூர்த்தி நகர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
தியாகி சத்தியமூர்த்தி நகர் முன்னாள் தலைவர் சி. ராஜி தலைமையில் எம். சுந்தரமூர்த்தி வரவேற்க
சிறப்பு விருந்தினர்களாக மனித நேயர் ஜி. வரதராஜன் நீதிபதிவி. ஆர். வேல்ராஜ் கலந்து கொண்டு வீரர் மற்றும் அவருடைய குடும்பத்தினரை பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி