சென்னை காசிமேட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை

2921பார்த்தது
சென்னை காசிமேட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட தீடீர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தேசிங்கு ராஜா(46). இவர் மீது கொலை கொலை முயற்சி போன்ற வழக்குகள் இருந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியான இவர் நேற்று தனது வீட்டின் தெருவின் முனையில் அமர்ந்துள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்ததாக கூறப்படும் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆட்டோவில் இருந்து இறங்கி சேரில் அமர்ந்து கொண்டிருந்த தேசிங்கு ராஜாவை கத்தியால் கழுத்தில் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். அக்கம் பக்கத்தினர்ஆம்புலன்ஸிற்காக போன் செய்வதற்கு முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி