எஸ்பி உத்தரவில் காவலர்களுக்கு பயிற்சி

85பார்த்தது
எஸ்பி உத்தரவில் காவலர்களுக்கு பயிற்சி
தமிழ்நாட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் முதல் டிஎஸ்பி. க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும்.
மேலும் லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் 4 உட்கோட்டத்தில் உள்ள டிஎஸ்பி க்கள் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு துப்பாக்கி பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகத்தில் மாலை 3: 30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி அழகேசன் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் திருவள்ளூர் டவுன் அந்தோணி ஸ்டாலின், திருவள்ளூர் தாலுக்கா வெற்றிச்செல்வன், மணவாள நகர் ரவிக்குமார் மற்றும் ஆறு சப் இன்ஸ்பெக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி