மாட்டு வண்டியில் தீவிர வாக்கு சேகரிப்பு

55பார்த்தது
*ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆதரித்து கொரட்டூர் பகுதியில் மாட்டு வண்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்*

தேர்தல் நெருக்கியதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவை ஆதரித்து அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் பகுதியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரட்டூர் பகுதியில் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பகுதி கழக செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். கொரட்டூர் அக்ரகாரம் தொடங்கி பிரதான சாலை வழியாக 100 அடி சாலையில் முடிவடைந்தது. அதில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என மக்களை சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி