காவு வாங்க காத்திருக்கும் கால்வாய்

59பார்த்தது
காவு வாங்க காத்திருக்கும் கால்வாய்
மாதவரம், தணிகாசலம் நகரில் உள்ள மழைநீர் வடிகால் அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த நிலையில், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கால்வாய் இணைப்பு முழுதும் முடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த நிலைமை தான்.

இதனால், அப்பகுதி காவு வாங்க காத்திருக்கும் கால்வாயாக மாறியுள்ளது. மேலும், சுற்றுச்சுவரும் சிறிது சிறிதாக இடிந்து வருவதுடன், அப்பகுதி குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. மாநகராட்சியிடம் பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில், இணைப்பு பகுதியில் தடுப்பு அமைத்ததுடன் கடமை முடிந்தது என, மாநகராட்சி நிர்வாகம் துாங்கிவிட்டது.

தொடர்புடைய செய்தி