திருத்தணி - Thiruthani

திருத்தணி: ரயிலை மறித்து இன்ஜின் மேலே ஏறிக்கொண்டு போராட்டம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உருவ பொம்மை எரிப்பு மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருத்தணி ரயில் நிலையத்தில் திருப்பதியில் இருந்து சென்னை செல்லக்கூடிய சப்தகிரி விரைவு ரயிலை மறித்து கொடிகளை ஏந்திக்கொண்டு 30-க்கும் மேற்பட்ட விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் ரயில் இன்ஜின் முன் பகுதி மீது ஏறிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் மட்டுமல்லாமல் திருத்தணி போலீசாரும் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் சென்னை செல்லக்கூடிய விரைவு ரயில் சிறிது நேரம் தாமதமாகச் சென்றது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా