ஆபத்தான முறையில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம்

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் பொம்மராஜ பேட்டை ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்

இந்த பகுதியில் நெசவுத்தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வரும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்

இந்த ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் மிகவும் பாழடைந்து கட்டடத்தின் மேற்கூரை கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு கட்டிடம் விரிசல் விட்டு ஆபத்தான முறையில் உள்ளது

இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தொடர்ந்து பணி புரிவதற்கு அச்சமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்

மேலும் கிராம நிர்வாக அலுவலர் தினந்தோறும் பல்வேறு அரசு பணிகளுக்காக சந்திக்கவும் பொது மக்களுக்கு இந்த கட்டிடத்திற்கு உள்ளே செல்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் ஆபத்தை எதிர் நோக்கி இந்த கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிபுரிந்து வருகிறார்

எந்த நேரத்திலும் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விடலாம் என்ற அளவிற்கு விரிசல் அதிகமாக விட்டு கட்டடம் ஆபத்தான முறையில் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி