ஆர்கே பேட்டை அருகே எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

68பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ எல்லையம்மன் சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் முன்னிட்டு யாக சாலை அமைத்து விக்னேஷ்வரப்பூஜை , கோ பூஜை கலச பூஜை , 108 மூலிகைகள் கொண்டு நடைப்பெற்ற சிறப்பு யாக பூஜையில் மகா பூர்ணாஹீதி நடைபெற்றது. மங்கள வாத்தியங்களுடன் கலச புறப்பாடு நடைப்பெற்றது. மூலவர் கோபுர கலசத்திற்க்கும், மூலவர் தேவி ஸ்ரீ எல்லையம்மன் சாமிக்கு கலச புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் எரும்பி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பத்துக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி