நடிகர் நிச்சயதார்த்த விழா: பாடல் பாடி அசத்திய மணமக்கள்

565பார்த்தது
திருத்தணியில் பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம் விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் பாட்டு பாடி அசத்தல்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும், நடிகருமான பிரேம்ஜி அவர்களுக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக நேற்று மாலை திருத்தணியில் உள்ள தனியார் ஹோட்டலில் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விழாவில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் மணமகள் பிரேம்ஜியின் சகோதரர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் இன்னிசை கச்சேரியில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இணைந்து சினிமா பாடல் பாடி அசத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி