சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 508 பால்குடம் ஊர்வலம்

81பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணைந்த கோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்ரா பௌர்ணமி விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். 38 ஆம் ஆண்டு, சிறப்பு நிகழ்ச்சி திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து 508 பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பெண் பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக பம்பை இசை வாத்தியங்கள் முழங்க ஓம் சக்தி ஓம் சக்தி என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் திருவலாங்காடு பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று  பத்ரகாளி அம்மன் திருக்கோவிலுக்கு சென்று பத்ரகாளி அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி