மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய தனது கருத்துக்களை நியாயப்படுத்தி பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், நேற்று முன்தினம் சில உண்மைகளை கூறினேன். அதைக் கேட்ட காங்கிரஸும், இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்துள்ளனர். உங்கள் சொத்துக்களை அபகரித்து, பிற மக்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு இதுவரை 20,000 பேர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.