வட காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ தேரோட்டம்

575பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடகாஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் முக்கிய விழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரினை வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தி பரவசத்துடன் இழுத்து வந்தனர். இதில் பொன்னேரி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி