மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

80பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மூன்று மணி நேரம் முதல், 5 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது, இதனால் தூக்கமின்றி இரவு நேரங்களில் புழுக்கத்தில் அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்,

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் முறையான பதில் கூறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்குள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செயற்பொறியாளர் அறைக்குச் செல்லும் வாசல் முன்பாக அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

தொடர்புடைய செய்தி