தங்கத் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமான்

72பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும்
இந்த திருக்கோயிலில் இன்று முன்னிட்டு முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து திருக்கோயிலில் உற்சவர் மூலவர் முருகப்பெருமானை வழிபட்டனர்
இதனை தொடர்ந்து ஆடி மாத பிறப்பை முன்னிட்டு
உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு பட்டு அங்க வஸ்திரம், தங்க ஆபரணம், சிறப்பு ரோஜா மாலையில், தங்கத்தேரில் எழுந்தருளினார்.
பக்தர்கள் தங்க தேரினை வடம் பிடித்து அரோகரா!!! அரோகரா!!!! என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்
திருக்கோயில் மாட வீதியில் தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளினார்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி