சாலையில் படுத்து உறங்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் அவதி.

55பார்த்தது
சாலையில் படுத்து உறங்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் அவதி.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியின் ரயில்வே மேம்பாலத்தில் இரவு மட்டும் பகல் நேரங்களில் மாடுகள் சாலைகளிலே சுற்றித் திரிவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் மணுக்கள் அளித்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் நாளுக்கு நாள் மாடுகளின் அட்டகாசம் சாலையில் அரங்கேற்றி வருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகி வருவதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி