ஆதிகேசவ பெருமாள் கோவில் சீரமைக்க கோரிக்கை

59பார்த்தது
ஆதிகேசவ பெருமாள் கோவில் சீரமைக்க கோரிக்கை
திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை கிராமத்தில். கொசஸ்தலையாற்றின் தெற்கு புறத்தில் அமைந்துள்ளது, ஆதிகேசவ பெருமாள் கோவில்.

இந்த கோவில், 1300 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாளுக்கு, இக்கோவிலில் பிரம்மோற்சவம் அன்று அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில், கடந்த 200 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது.

மேலும், கோவிலை புனரமைக்க ஊர் மக்கள் திருப்பணி கமிட்டி அமைத்து சீரமைக்க திட்டமிட்டும் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி