மோசமான நிலையில் உள்ள சாலை

80பார்த்தது
மோசமான நிலையில் உள்ள சாலை
புழல் மத்திய சிறைச்சாலை எதிரே, சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் மற்றும் ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகளை நிலைதடுமாற வைத்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில், 1 அடி ஆழம் கொண்ட பள்ளங்கள் உள்ளன.

குறிப்பாக, புழல் சிறைச்சாலை பகுதி சாலை படுமோசமாக உள்ளது. மேலும், இந்த பள்ளங்களால், இருசக்கர வாகன ஓட்டிகளே அதிகளவில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள அம்பத்துார் கள்ளிக்குப்பம் முதல், புழல் சந்திப்பு வரையிலான, 8 கி. மீ. , துார செங்குன்றம் சாலை மோசமான நிலையில் உள்ளது.

மேலும், மாநகராட்சி பராமரிப்பில் உள்ள, 4 கி. மீ. , துார மாதனான்குப்பம் சாலை, செங்குன்றம் ஜி. என். டி. , சாலை சந்திப்பு முதல், தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி எல்லை வரையிலான, 3 கி. மீ. , துார சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை ஆகியவை படுமோசமான நிலையில் உள்ளது.

சில நாட்களாக பெய்த மழையால், இச்சாலைகள் மேலும் சேதமடைந்துள்ளன. இது குறித்து சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும்.

தொடர்புடைய செய்தி