சென்னை வடகிழக்கு மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நெல்லூர் ஊராட்சி கிருஷ்ணா நகர் பகுதியில் ரூபாய் 30. 66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினை மக்கள் பயன்பாட்டுக்காக மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சோழவரம் ஒன்றிய செயலாளர் மீ. வே. கருணாகரன், கழக நிர்வாகிகள், தோழர்கள் உடன் இருந்தனர்.