பழமைவாய்ந்த வைத்தியநாத சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா.

63பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு சிவபெருமானை வணங்கினர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காளஹஸ்தீஸ்வரர், பஞ்ச கோஷ்ட தேவதைகள், ஆஞ்சநேயர், மஹாநந்தி, விநாயகர், முருகப்பெருமானுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி