தொடர் மழையால் திருவள்ளூர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

82பார்த்தது
தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை மாநகரின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம் நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 250 கன அடி நீர் வரத்து வரும் நிலையில், கொசஸ்தலை ஆற்றில் 250 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேபி கால்வாயில் 17 கன அடி சென்னை குடிநீருக்கு செல்கிறது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து பூண்டி அணைக்கு வருவது மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

புழல் ஏரியின் நீர்மட்டம் 21.20 அடியில் தற்போது 20.67 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடியில் 3158 மில்லியன் கனஅடி கொள்ளளவு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 272 கனஅடி என்பது கன அடி நேற்று வந்த நிலையில், இன்று அது 302 கனஅடி அதிகரித்து வருகிறது. சோழவரம் ஏரி நீர்மட்டம் 18.86 அடியில் தற்போது 9.24 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடியில் 366 மில்லியன் கனஅடி கொள்ளளவு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 35 கனஅடி நீர் வரத்து வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி