தூத்துக்குடி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் இவர் நேற்று மாலையில் தன்னுடன் பணியாற்றும் ஏட்டு நாகராஜன் (43), போலீஸ்காரர் லோகேஷ்வரன் (34) ஆகியோருடன் காரில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜசேகர் (38). இவர் இ. எஸ். ஐ. மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு சென்று விட்டு, அங்கிருந்து வேனில் திரும்பி வந்து ெகாண்டிந்தனர். திருச்செந்தூர் அருேக நத்தக்குளம் வளைவு பகுதியில் சென்றபோது, போலீசார் வந்த காரும், பக்தர்கள் வந்த வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு நாகராஜன், போலீஸ்காரர் லோகேஷ்வரன் மற்றும் வேனில் வந்த ராஜசேகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.