மாவட்ட‌ செயலாளர் மனைவியிடம் தகராறு செய்தவர் கைது

553பார்த்தது
மாவட்ட‌ செயலாளர் மனைவியிடம் தகராறு செய்தவர் கைது
திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறையை சேர்ந்தவர் சங்கர். இந்து முன்னணி மாவட்ட செயலரான இவரது மனைவி மகேஸ்வரி. இவர் கருப்பந்துறையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு வந்த கணேசன் (35) மகேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். இது குறித்து மகேஸ்வரி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கணேசனை இன்று (மார்ச் 16) கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி