7-வது முயற்சியில் டாக்டர் கனவு நிறைவேறும் வாய்ப்பு

76பார்த்தது
7-வது முயற்சியில் டாக்டர் கனவு நிறைவேறும் வாய்ப்பு
மேலப்பாளையம் அத்தியடி கீழத் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி செய்த அலி பாத்து. இவர்களின் இரண்டாவது மகன் முகமது பைசல் 2018 -ம் ஆண்டு மேலப்பாளையம் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். அந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெறும் 71 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 2வது முறையாக நீட் எழுதியுள்ளார் அதில் 325 மதிப்பெண் பெற்றார்.

பொது கோட்டாவில் மருத்துவராக சேர 600 மதிப்பெண்களுக்கு மேல் தேவை என்பதால் 3 -வது முறையாகவும் நீட் தேர்வு எழுதினார். அதில் 460மதிப்பெண்கள் தான் எடுக்க முடிந்தது மனம் தளராத முகமது பைசல் 4-வது முறையாக நீட் தேர்வு எழுதி 514 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணும் கை கொடுக்காததால் 5-வது முறையாக எழுதிய நீட் தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்றார். மீண்டும் 6 -வது முறையாக நீட் தேர்வு எழுதியவர் 539 மதிப்பெண்கள் பெற்று BC முஸ்லீம் கோட்டாவில் 2 மார்க் வித்தியாசத்தில் டாக்டராகும் கனவை இழந்தார்.

இதனால் மனமுடைந்த முகமது பைசல் மீண்டும் தன்னுடைய பெற்றோர்கள் அளித்த உற்சாகத்தில் 7-வது முறையாக இந்த வருடம் நீட் தேர்வு எழுதினார். அதில் 720 க்கு 603 மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் வாய்ப்பை பெற்றார். இந்த மாணவனை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி