நெல்லையை சேர்ந்த ராஜசேகர் ஜனனி தம்பதியின் மகள் தீக்ஷனா 9ம் வகுப்பு படிக்கிறார். இவர் சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்று பல்வேறு சவாலான ஓவியங்களை வரைந்து வருகிறார் சமீபத்தில் 99 தமிழ் பூக்களை தாம்பூழ தட்டில் வரைந்து அசத்தினார் இந்த ஓவியம் பெரும் பாராட்டை பெற்ற நிலையில் இன்று முருகன் குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் சார்பில் மாணவி தீக்ஷனாவுக்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கினர்.