நெல்லை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நிவாரண தொகை பெறாதவர்களுக்கு இன்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்க இருப்பதால் இனிமேல் கால அவகாசம் வழங்க வாய்ப்பில்லை எனவே இன்று வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.