நெல்லை ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீதிமன்றம்

74பார்த்தது
நெல்லை  ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீதிமன்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்றம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மே 29, 30ஆம் தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் சுதன் தலைமையில் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால், காவல் துறைக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களை இருப்பின், தகுந்த அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்ல இவ்வாணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் tnscpwdcircuitcourt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மனுக்கள் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி