திணறும் மேலப்பாளையம் மக்கள் - அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

53பார்த்தது
திணறும் மேலப்பாளையம் மக்கள் - அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
நெல்லை மாநகர மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா முதல் அம்பை சாலை விஎஸ்டி பள்ளிவாசல் வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இவ்வாறு தினம்தோறும் ஏற்படும் நெரிசலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி