பள்ளி மாணவர்களுக்கு இன்று (ஜூன் 10) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டவுன் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் வந்த மாணவர்களுக்கு 28வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் இனிப்பு வழங்கி தேசிய கொடி ஏற்றி மாணவர்களை வரவேற்றார். இந்த நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.