சேரை அருகே வாழைபயிரை சேதப்படுத்திய காட்டு பன்றிகள்

51பார்த்தது
சேரை அருகே வாழைபயிரை சேதப்படுத்திய காட்டு பன்றிகள்
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே தெற்கு சங்கன் திரடு பகுதியை சேர்ந்தவர் மணி. வாழை விவசாயம் செய்து வருகிறார். இவரது வாழை தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு பன்றிகள் வாழை குருத்துகளை தின்று வாழைகளை சேதப்படுத்தி சென்றுள்ளன. சுமார் 200 வாழைகள் சேதமடைந்து உள்ளன. மணி வனதுறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்

தொடர்புடைய செய்தி