அம்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாரசந்தை கடைகள் அகற்றம்

6966பார்த்தது
அம்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாரசந்தை கடைகள் அகற்றம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் சாலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வார சந்தை நடைபெறும் இடம் புறம் போக்கு பகுதி என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து அம்பாசமுத்திரம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (20.02.2024) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சந்தையை ஆக்கிரமித்து இருந்த அனைத்து கடைகளும் அகற்ற பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி