அமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?

65பார்த்தது
அமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதை விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, “வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா? அமைச்சரின் கூற்றில் சிறிதும் உண்மையில்லை. சென்னையின் மின் தேவையை நிறைவேற்றும் அளவுக்குக்கூட மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையவில்லை என்பது தான் உண்மை” என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி