காருக்குள் கள்ளக்காதல்..? - கண்டித்த மனைவி மீது தாக்குதல்

52பார்த்தது
காருக்குள் கள்ளக்காதல்..? - கண்டித்த மனைவி மீது தாக்குதல்
கோவை பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரில் வசிப்பவர் 27 வயது பெண். இவர் ஐ.டி நிறுவன ஊழியர். இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி ஊழியரான ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர், அந்த பகுதியில் தனது காரில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இது பற்றிய செய்தி மனைவிக்கு தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று ஆவேசமடைந்த அந்த இளம்பெண், கார் நின்ற பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.

தனது கணவரும், அந்த பெண்ணும் காரில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே சம்பவ இடத்திலேயே உரக்க கத்த தொடங்கினார். இது குறித்து கேட்டு கணவனிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் தனது மனைவியை தாக்கியுள்ளார். தொடர்ந்து பீளமேடு போலீஸ் நிலையம் சென்ற அப்பெண் கணவன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தொடர்புடைய செய்தி