என்னை மாதிரி அப்பாவியும், கெட்டவளும் யாரும் இல்லை...

3906பார்த்தது
என்னை மாதிரி அப்பாவியும், கெட்டவளும் யாரும் இல்லை...
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சுவாரஸ்சியமாக சென்றுக் கொண்டிருக்கிறது. 20 பேர் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி ஆகிய இருவரும் வெளியே சென்றுவிட்டனர். வைல்டு கார்டு என்ட்ரி மைனா நந்தினி வந்திருக்கிறார். இந்த வார நாமினேஷனில் அசீம், ஆயிஷா, அசல் கோலார், ரச்சிதா, ஜனனி, மகேஸ்வரி, ஆர்யன் ஆகிய 7 பேர் உள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. நீயும் பொம்மை, நானும் பொம்மை என்று கொடுக்கப்பட்டுள்ள அந்த டாஸ்க்கில் 19 போட்டியாளர்களின் பெயர்கள் ஒட்டப்பட்ட பொம்மைகள் இருக்கும். அதில் தன்னுடைய பெயர் இல்லாத பொம்மைகளை எடுத்துக்கொண்டு கார்டனில் ஏரியாவில் உள்ள இடத்தில் போடவேண்டும்.

அங்கு 18 பொம்மைகள் வைக்க மட்டுமே இடம் உள்ள நிலையில் ஒரு பொம்மை மட்டும் மீதம் இருக்கும். அந்த பொம்மையில் பெயர் உள்ள டாஸ்க்கிலிருந்து வெளியேறவேண்டும் என்பது விதி. அதன்படி விளையாடும் போது முதலில் மணிகண்டன் வெளியேறுகிறார். பின்னர் அடுத்த சுற்றில் பசர் அடித்த பிறகு அனைவரும் ஓட ஷெரினா மட்டும் ஜனனியின் பெயர் உள்ள பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடவில்லை. இதையடுத்து டாஸ்க்கிலிருந்து ஜனனி வெளியேறினார். இதனால் கடுப்பான ஜனனி, என்னை போன்று அப்பாவியும் இல்லை, கெட்டவளும் இல்லை என்று கூறும் காட்சிகள் வெளியாகியுள்ளது. வில்லி ஸ்டைலில் ஜனனி கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி