ஆழ்வார்திருநகரி கோவிலில் தெப்ப உற்சவம்

85பார்த்தது
ஆழ்வார்திருநகரி கோவிலில் தெப்ப உற்சவம்
தூத்துக்குடி: நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் கடந்த பிப்.20இல் நடைபெற்றது. 9ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வியாழனன்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீா்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி