கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கிய ஐந்து பெண்கள்

1543பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சாவுடன் ஐந்து பெண்கள் போலீசாரிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பெருங்காமநல்லூர் பிரிவில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பெருங்காமநல்லூர் பிரிவில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர்.

21கிலோ கஞ்சா மற்றும் 5120 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து சேடபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். , சேடபட்டி காவல் நிலைய போலீசார் இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று உசிலம்பட்டி அருகே வடுகபட்டி சுடுகாடு அருகே கஞ்சா பறிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமாற்றம் செய்து வடுகபட்டியைச் சேர்ந்த வளர்கொடி, மதுரையைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் ஆறுமுகத்தம்மாள் ஆகிய மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தினர். வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி