தேனி மாவட்டம், திண்டுக்கல் குமுளி நெடுஞ்சாலையில், தேவதானப்பட்டி அருகே, டூவீலரும் அரசு பஸ்ஸும் மோதிக்கொண்ட விபத்தில் அட்டணம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் அழகுராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த தேவதானப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.