தேனி அருகே அரசு ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

58பார்த்தது
தேனி அருகே அரசு ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 57). இவர் தேனி மாவட்ட தொழில் மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10ம் தேதி அன்று இவரது மனைவி தோட்டத்துக்கு சென்று விட்டார். சுந்தரம் கடைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர், சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரம் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து, சுந்தரம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி