வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு அன்றாடம் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். நெகிழிப் பை உபயோகத்தை தவிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த இயந்திரம் இயங்காமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.