15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர்

64பார்த்தது
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர்
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (64). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் பண்ணையாளராக வேலை பார்த்து வந்தார். அங்கு விவசாய கூலி வேலை பார்க்க வந்த 15 வயது சிறுமியை பெரியசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி