சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோவில் கைது

65பார்த்தது
சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோவில் கைது
சேலம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (64) என்பவர் தனியார் விவசாய தோட்டத்தில் பண்ணையாளராக வேலை பார்த்து வந்தார். அங்கு விவசாய கூலி வேலை பார்க்க வந்த 15 வயது சிறுமியை பெரியசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், 3 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் முதியவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி