தனியார் பாரை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
தேனி நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் சென்று வரக்கூடிய காட்டு பத்திரகாளியம்மன் கோவில் அருகே செயல்படக்கூடிய தனியார் மதுபான பாரில் நிர்ணயித்த நேரத்தை விட கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என பெண்கள் விடுதலை கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி