சேலம் அழகாபுரத்தில் வசிக்கும் ஒடிசாவை சேர்ந்த பூஜாகுமாரி (29) என்பவரின் மகள் லட்சுமி குமாரி. சிறுமியான இவர் கடந்த 25ஆம் தேதி இரவு ப்ரைடு ரைஸ், சப்பாத்தி, கத்திரிக்காய் ஆகிய உணவுகளை சாப்பிட்ட பிறகு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியின் பிரேத பரிசோதனை அடிப்படையில் அவரது உடலில் இருந்து மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.